#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Thursday, December 23, 2010

தமிழ் சினிமா 2010 – ஒரு பார்வை

2010 ஐ பொறுத்த வரையில் 2008, 2009 ஆம் ஆண்டுகள் போலவே நல்ல கதையம்சம் அல்லது அருமையான திரைக்கதை வடிவமைப்புக்கள் கொண்ட திரைப்படங்கள் ஓடியதும் வெறுமனமே ஹீரோக்களையும் அவர்களது (சகிக்க முடியாத) பில்டப்புகளையும் நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பிளாப் ஆகிவருவதும் அதிகரித்துள்ளது.இது தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் செல்வதை காட்டுகின்றது. இந்த ஆண்டு எனது மனதை கவர்ந்த திரைப்படங்களை பற்றி இங்கே கீழே விவரிக்கின்றேன்...இவை முற்றும் முழுதாக எனது விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தாலும் நல்ல கதை/ திரைக்கதை அல்லது இவ்விரண்டும் அருமையாக அமைந்த தரமான திரைப்படங்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றேன்.முக்கியமாக இவற்றை வசூல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை.

1.விண்ணை தாண்டி வருவாயா.....


காதலுக்கும் காதலர்களுக்கு இடையிலும் வருகின்ற பிரச்சினைகளை மிக யாதார்த்தமான அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டு இருக்கின்றது இத்திரைப்படம். படத்தின் பின்பகுதி சற்று நீளமாக இருந்து அலுப்புட்டினாலும் கெளதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆன திரைக்கதை உருவாக்கம் & வசனங்கள்(உலகத்தில எவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்...! இந்த வசனம் மறக்க முடியுமா...?), எ.ஆர் ரகுமானின் இசை/பாடல்கள், மனோஜ் பரஹம்ஷாவின் அற்புதமான ஒளிப்பதிவு, சிம்புவின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு(இதுக்கு முன்னாடி இவர் நடிச்சு பார்த்ததே இல்லையே.....) என்பன படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தின் வெற்றிக்கு உதவியது. 2000 ஆம் ஆண்டில் வந்த அலைபாயுதே திரைப்படம் இளைஞர்களிடையே பெற்ற வரவேற்ற்பை விட இதற்கு கூடுதலான வரவேற்பு கிடைத்தது.

2. அங்காடித்தெரு


முதலாளித்துவத்தின் சுரண்டல்களையும் வெளிப்பார்வைக்கு அழகாக தோற்றமளிக்கும் பெரிய வியாபார நிலையங்களின் தொழிலாளர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தும் அழுக்கான பக்கங்களையும் வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படம் ஆகும். மகேஷ் & அஞ்சலியின் அருமையான நடிப்பு ,எ.வெங்கடேஷ் இன் மிரட்டும் வில்லத்தனமான நடிப்பு, எவருமே இதற்கு முன்னர் சொல்லாத புதுக்கதை ,அதை திறம்பட இயக்கிய வசந்த பாலன் இந்த திரைப்படத்திற்கு பலங்களாக அமைந்தது.

3. நாணயம்.



ஒரு பாங்(வங்கி) கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். பிரசன்னா ,சிபிராஜ் ,எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் நடித்து இருந்தனர். திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டு இருந்தது. எனினும் படம் பெரிதாக ஓடவில்லை.

4. தமிழ்ப்படம்


hollywood இல் சூப்பர் ஹிட் ஆனா திரைப்படங்களை எல்லாம் மொக்கை போட்டு ஒரு படம் எடுப்பார்கள். hollywood இல் இப்படி நிறைய படங்கள் வெளிவந்துள்ளன..ஆனால் தமிழில் இப்படியான திரைப்படங்கள் வருவதே இல்லை என்ற குறையை தமிழ்ப்படம் நீக்கி விட்டது. தமிழ் சினிமாவின் அபத்தங்களையும் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பண்ணும் ஓவர் ஹீரோயிசங்களையும்(ஒருவர் கூட மிச்சம் விடாமல் ) கிண்டல் அடித்தது இப்படம். இது போல நிறைப்படங்கள் வந்தால் தான் தமிழ் சினிமாவில் அபத்தமான திரைப்படங்கள் வருவது குறையும்.


5. இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்




கௌபாய் திரைப்படம் ஒன்றை தனியே கௌபாய் காலத்து கலாச்சாரதுடன் எடுக்காமல் அதனுடன் தமிழ்க்கலாச்சாரம், லேட்டஸ்ட் தமிழ் நாட்டு நிலவரங்களையும் சேர்த்து காமெடியில் பிரித்து மேய்ந்த படம் இது. நகைச்சுவை திரைபடங்களில் பெரிதாக லாஜிக் பார்க்க அவசியம் இல்லாத படியால் இதில் வரும் எல்லா காமெடிகளையும் ரசிக்க முடிகின்றது.


6. மதராசிப்பட்டணம்




டைட்டானிக் போல இருக்கின்றது, லாகன் சாயல் தெரிகின்றது போன்ற விமர்சனங்களையும் தாண்டி படம் வெற்றி பெற்றதுக்கு பழைய மெட்ராஸ் ஐ கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய செட்(கலை), தெளிவான திரைக்கதை, ஆர்யா எமிஜாக்சன், வி.எம்.ஹனிபா ஆகியோரின் நடிப்பு, ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள்/இசை என்பன அமைந்தது.பிரிட்டிஷ் காலத்தில் அதுவும் இந்தியா சுதந்திரம் அடைவத்ற்கு சிறிது காலத்திற்க்கு முன்னரான காலப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் ஏற்ப்படும் ஒரு காதலை, அருமையாக சொல்லி இருந்தார் இயக்குனர் விஜய்.


7. களவாணி




கிரமாத்து திரைப்படங்களில் வரும் வன்முறைக்காட்சிகள், அழுக்கு ஹீரோ, சோக முடிவுகள் போன்ற காட்சிகள் இல்லாமல் முழுமையாக காமெடியும் யாதர்த்தமும் நிரப்பி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தஞ்சாவூர் பின்னணி(வழமையா மதுரையை தானே வைப்பாங்க), விமல், ஓவியா, கஞ்சா கறுப்பு என படத்தில் வந்த அனைவரினதும் நடிப்பு, கிராமத்து அழகை காட்டும் ஒளிப்பதிவு என்பன படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது.


8. வம்சம்.


கிராமங்களில் சத்தம் இல்லாமல் நடக்கும் வம்சப்பகைகளையும் பழிக்குபழி தீர்க்கும் படலங்களையும் யாதார்த்தத்துடுடன் எடுத்து இருந்தார்கள். அருள் நிதி, சுனைனா, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோரின் இயல்பான நடிப்பு, கஞ்சா கருப்புவின் காமெடி, அற்புதமான ஒளிப்பதிவு என்பன படத்திற்கு பலமாக அமைந்தது.

9. மைனா




படம் தொடங்கும் போது வழமையான கிராமத்து படம் போலவே ஆரம்பித்தாலும் பின்னர் வித்தியாசமான பாதையில் பயணித்து இருக்கிறதுக்கு இத்திரைப்படம். விதார்த், அமலா,தம்பி ராமையா ஆகியோரின் இயல்பான நடிப்பு, மலைப்பகுதிகளை அழகாக எடுத்துக்காட்டிய ஒளிப்பதிவு, இமானின் இசை/பாடல்கள் பிரபு சாலமனின் திறமையான திரைக்கதை வடிவமைப்பு போன்றன படத்திற்கு பலம் சேர்த்தன.

10. நந்தலாலா



ஒரு ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்களையும் தாண்டி பலரால் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது.இந்த திரைபடத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் பெரும்பாலான இதன் விமர்சனங்கள் படம் நன்றாக இருப்பதாக கூறுவதால் இதையும் இந்த பட்டியலுக்குள் சேர்த்துள்ளேன்.

2010 ஆம் ஆண்டு நன்றாக வசூல் அள்ளிய திரைப்படங்கள்

1. எந்திரன்

2. சிங்கம்

3. பையா

4. விண்ணை தாண்டி வருவாயா

5. மதராசிப்பட்டணம்

6. தமிழ்ப்படம்

7. களவாணி

8. வம்சம்

9. மைனா

10. நான் மகான் அல்ல

11. பாஸ் என்கின்ற பாஸ்கரன்

பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் அரதப் பழசான கதை, சொதப்பலான திரைக்கதை என்பவற்றினால் தோல்வி அடைந்துள்ளது. அவற்றின் விவரம்:

  1. அசல்
  2. கோவா
  3. ஆயிரத்தில் ஒருவன்
  4. தீராத விளையாட்டுப்பிள்ளை
  5. சுறா
  6. குட்டி
  7. ராவணன்
  8. தில்லாலங்கடி
  9. கச்சேரி ஆரம்பம்

No comments: