#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Saturday, October 15, 2011

கடுப்பை கிளப்பும் தற்போதைய கிரிக்கெட்

சர்வதேச கிரிகெட்டில் இது மிக பரபரப்பான காலப்பகுதி. 2011 பருவ காலம் முடிந்து 2011/2012 பருவ காலம் தொடங்கி விட்ட நிலையில், தற்போது டெஸ்ட் அந்தஸ்து உள்ள நாடுகள் அனைத்தும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி வருகின்றன. தென்னாப்ரிக்கா அவுஸ்திரேலியா அணிகள தென்னாப்ரிக்காவிலும் ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேயிலும் வெஸ்ட் இண்டீஸ், பங்களாடேஷ் அணிகள் பங்களாதேஷிலும் பாகிஸ்தான் இலங்கை அணிகள் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் இங்கிலாந்து, இந்திய அணிகள் இந்தியாவிலும் தற்போது தொடர்களை விளையாடி வருகின்றன/உள்ளன.இதனை தொடர்ந்து இன்னும் சில முக்கிய தொடர்களும் இடம்பெறவுள்ளன.

தற்போது நடைபெறும் சிலபோட்டிகளில் இடம்பெற்ற கடுப்பை கிளப்பிய சம்பவங்களை இங்கே கூறுகின்றேன்.

தென்னாப்ரிக்கா அவுஸ்திரேலியா அணிகள விளையாடிய முதாலவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இருந்தும் அன்றைய போட்டியில் விளையாடிய (ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்பட்டு வரும்!)ஸ்டீவ் ஸ்மித் என்ன காரணத்துக்கு ஆக அணிக்குள் தேர்ந்து எடுக்கப்பட்டார்(தொடர்ந்தும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன)என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.அவரது பந்து வீச்சும் துடுப்பாட்டமும் சுமார் தான். அன்றைய போட்டியில் அவர் பந்து வீசவே இல்லை. பகுதி நேர பந்து வீச்ச்சாளர் டேவிட ஹஸ்ஸி 3 ஓவர்களும் முழு நேர சுழல் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஒ கேபி ஒரு ஓவரும் பந்து வீசினார்கள். பின்னர் எதுக்கு ஸ்டீவ் ஸ்மித் அணியில்? ஸ்டீவ் சிமித்தை துடுப்பாட்டத்துக்கு தேர்ந்து எடுத்திருந்தார்கள் என்றால் அவரை விட பவர் ஹிட்டர்கள் நிறைய பேர் (உதாரணம் CULLAM FERGUSAN, AREON FINCH, ADAM VOGES) உள்ளனர்.அவர்களை தேர்ந்து எடுத்து இருக்கலாமே. அவுஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் நான்கு பிரதான பந்து வீச்சாளர்கள் (3 வேக பந்து வீச்சாளர்கள் + 1 சுழல் வீச்சாளர்) உடனேயே களம இறங்க முடியும் எந்த போட்டிக்கும். ஐந்தாவது பந்து வீச்சாளராக
ஷேன் வாட்சன், டேவிட ஹஸ்ஸி, மைக்கல கிளார்க் போன்றாவர்களை வைத்து தாரளமாக சாமளிக்க முடியும். அதனை விடுத்து ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களை தேர்ந்து எடுத்து ஒரு துடுப்பு ஆட்ட வீரரின் இடத்தையும் பறித்து எடுத்து, இது போதாது என்று டொம மூடி, இயன் ஹார்வி, பால் ரைபிள்,ஷேன் லீ,பிரெண்டன் ஜூலியன், அன்ரு சைமன் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்கள் விளையாடிய அணியில் இவரையும் ஆல்ரவுண்டரர் என்று அழைத்து கடுப்பை கிளப்புறாங்க மை லார்ட்....



அடுத்த செம கடுப்பு இந்திய அணியில் பார்த்தீவ் பட்டேலின் தேர்வு. இந்திய அணிக்கு டோனி விக்கெட கீபிங் செய்யும் போது எதற்க்கு இரண்டாவது விக்கெட் கீப்பர்? அப்படியே இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆக தேர்வு அணிக்குள் இடம்பெற்று இருந்தாலும் விளையாடும் அணிக்குள் எதற்கு இடம் பெற்றார்?௦ பார்த்தீவ் பட்டேல் ஒன்றும் அதிரடியான சிறந்த துடுப்பாட்ட வீரர் அல்ல.அவரது பில்டிங் உம் மோசம.அது முதாலவது ஒரு நாள் போட்டியிலேயே தெரிந்தது.அவரை விட சிறந்த வீரர்கள் பலர் இருக்கும் போது தேர்வாளர்கள்
ஏன் இவரை மட்டும் தேர்ந்து எடுகின்றார்ககள்? ராபின் உத்தப்பா சாலஞ்சர் தொடரில் அதிரடி சதம் அடித்து கலக்கி இருந்தார். அதே போல சவுரப் திவாரி, அம்பாட்டி ராயுடு, மனோஜ் திவாரி போன்றவர்கள் இருக்கும் போது பார்த்தீவ் பட்டேல் தேவையா? இந்திய அணிக்கு தேவை அதிரடியான சிறந்த துடுப்பு ஆட்ட வீரர்களே தவிர பார்த்தீவ் பட்டேல் போன்ற சராசரி வீரர்கள் இல்லை.





அதே போல பந்து வீச்சில் 120-125 KMPH இல வீசும் வினய்குமார் இன் தெரிவும் புரியாத மர்மமே...வருண் அரோன் ஐ தேர்வு அணியில் மட்டுமே வைத்து கொண்டு விளையாடும் பதினொருவர் அணியில் இடம் பெற செய்யமாட்டார்கள் போல தெரிகின்றது. இந்திய அணிக்கு தற்போது தேவை 138-145 KMPH இல வீசும் பந்து வீச்சாளர்களே தவிர வினய்குமார் போல ஸ்லா மீடியம் பந்து வீச்சாளர்கள் அல்ல.

இனி வரும் காலங்களில் ஆவது அணித்தேர்வில் எல்லா நாடுகளும் மிகுந்த கவனம் செலுத்துவது நன்று.இல்லா விட்டால் போட்டிகளில் தோற்க வேண்டி நேரிடலாம்.



2 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

கிரிக்கெட் பார்ப்பவர்களைக் கோமாளிகள் ஆக்காமலிருந்தால் சரி

Akash said...

@ எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்

உங்கள் ஆதங்கம் நியாயமானது.தங்கள் வருகைக்கு நன்றி...தொடர்ந்து வாருங்கள்!