சூர்யா - ஹரி கூட்டணியில் சீகுவேல் ஆக வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்று இருக்கின்றன. எனக்கு தெரிந்து சிங்கம் படம் மட்டும் தான் தமிழ் இல் சீகுவேல் ஆக வெளிவந்த இரு படங்களுமே பெரிய வெற்றி பெற்று இருகின்றது. இதற்க்கு முன்னர் முனி பார்ட் 2 காஞ்சனா ஆக வந்து பெரிய வெற்றி பெற்று இருந்தாலும் முனி பார்ட் 1 வெற்றி பெறவில்லை.
இந்த வேளை சிங்கம் பார்ட் 3 வருமா என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். சிங்கம் ஒன்றில் பிரகாஷ் கதாபாத்திரத்தை ஐ அவசரப்பட்டு கொன்று விட்டு சிங்கம் இரண்டில் ஒரு பிரமாதமான நடிகர் + வில்லன் ஐ இழந்து தவித்த ஹரியும் சூர்யாவும் உஷாராக சிங்கம் இரண்டில் பிரதான வில்லன் ஆன டானி யை கொல்லமால் வெறும் சிறையில் அடைத்து விட்டு சிங்கம் மூன்று க்கு ஒரு வழி அமைத்து இருகின்றார்கள். அநேகமாக அவன் சிறையில் இருந்து தப்பி மீண்டும் சூர்யா உடன் சண்டை பிடிப்பது போல கதை அமைப்பார்கள் என நினைக்கிறன்.
அதே போல சிங்கம் ஒன்றில் காதலித்த சூர்யா அனுஷ்கா க்கு சிங்கம் இரண்டில் தான் நிச்சயதார்த்தம் முடிந்து இருகின்றது. கல்யாணம் பண்ணுவது போல காட்டவில்லை. இது எல்லாம் சிங்கம் மூன்று எடுக்க கதையில் ஹரியால் விடப்பட்ட வழிகள் போல தான் தெரிகின்றது. அநேகமாக சிங்கம் மூன்றில் தான் கல்யாணம் நடக்க போகிறது போல.
சிங்கம் பட துரைசிங்கம் கதாபாத்திரமும் கிட்ட தட்ட ஜேம்ஸ்பாண்ட் போலவே படைக்க பட்டு இருகின்றது. ஜேம்ஸ்பாண்ட் க்கு போலவே ரகசியமாக அவருக்கு உத்தரவுகளை , ஆதரவுகளை தரும் உயர் அதிகாரி (சிங்கத்தில விஜயகுமார் ), ஜேம்ஸ்பாண்ட் போலவே கிட்ட தட்ட one man army போல எதிரிகளை தோற்கடிக்கும் விதம் என்பவற்றை குறிப்பிடலாம்.
சிங்கம் இரண்டின் success meeting இல் ஹரியும் சூர்யா வும் சிங்கம் மூன்று க்கான பாதையை பூடகமாக தெரிவித்து கொண்டு தான் இருகின்றார்கள். சிங்கம் மூன்று க்கான கதை சிங்கம் ஓன்று, சிங்கம் இரண்டை விட பலமானதாக அமைந்தால் உடனேயே சூர்யா வை கூட்டிக்கொண்டு ஷூட்டிங் கிளம்பி விடுவேன் என்று ஹரி தெரிவித்தார்.
இப்படி சிங்கம் படங்கள் வெற்றி பெற்றால் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல சீகுவேல் ஆக சிங்கம் படங்கள் எடுக்கலாம். இவை எல்லாம் எனது கணிப்புகள் தானே தவிர உறுதி படுத்த பட்ட செய்திகள் அல்ல...ஹி ஹி ஹி
சரி சரி நண்பர்களே... கடுப்பு ஆகாமல் உங்கள் வோட்டுக்களை செலுத்தி விட்டு செல்லுங்கள்
1 comment:
வேட்டையாடு விளையாடு பகுதி 2 வருமா?!
Post a Comment